​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"ஜார்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன"

Published : May 04, 2024 7:39 AM

"ஜார்கண்ட் மாநிலத்தின் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன"

May 04, 2024 7:39 AM

ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களின் வரலாறு தெரியாமலும், அவர்களின் விருப்பங்கள் என்னென்ன என தெரிந்துகொள்ளாமலும், அம்மாநிலத்தின் இயற்கை வளங்களை காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் சேர்ந்து கொள்ளையடித்துவருவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். 

சிங்பம் மாவட்டத்தில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஜார்கண்டில், அரசியல் கட்சி பிரமுகர்கள் முதல் முதலமைச்சர் பதவி வகித்த ஹேமந்த் சோரன் வரை அனைவரும் கனிம வள கொள்ளையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்தார்.

மேலும், இந்தியா சுதந்திரம் பெற்றதற்கு ஒரே குடும்பம் தான் காரணம் என காங்கிரஸ் கற்பிக்க முயல்வதாகவும் மோடி கூறினார்.